மகாவிதுஷி M.L.வசந்தகுமாரியின் பிறந்த நாள் இன்று. ஒரு காலத்தில் அவர் பாடிய திரைப்பாடல்களை தேடித்தேடி சேகரித்தேன்... பல கேஸட்களிலும் CDக்களிலும் அவற்றை பதிவு செய்தேன்....
'எல்லாம் இன்ப மயம்', 'ஆடாத மனமும் உண்டோ', 'ஆடல் காணீரோ', 'பாற்கடல் அலை மேலே', 'அந்தி மயங்குதடி', 'ஆடும் அருள் ஜோதி' போன்ற எண்ணற்ற பாடல்களில் அவரின் ஆளுமையை கண்டு வியந்திருக்கிறேன். அதே வேளையில் 'கூவாமல் கூவும் கோகிலம்', 'வஞ்சமிதோ வாஞ்சையிதோ', 'மஞ்சள் வெய்யில் மாலையில', 'எங்கே மறைந்தனையோ', 'கனியோ பாகோ கற்கண்டோ', 'சின்னஞ்சிறு கிளியே' போன்ற பாடல்களில் காட்சியின் சூழ்நிலைக்கேற்ப MLV மென்மையாக , மெல்லிசையாக உருமாறி ஒலித்தது மிக அழகு.
'ஐயா சாமி ஆவோஜி சாமி', 'வருவாய் மனமோகனா' போன்ற பாடல்களில் துள்ளலாய் ஒலித்தது MLVயின் குரல் என்று உணர்ந்த போது அதிசயமாக இருந்தது.
அதுப்போல இந்த பாடல்...Waltz style லில் எவ்வளவு அருமையாக அமைந்திருக்கிறது-மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இணந்து இசையமைத்த முதல் படம்....சிவாஜி கணேசன்-பத்மினி இணைந்து நடித்த முதல் படம்.... கலைவாணர் N.S.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான "பணம்" படத்திலிருந்து...
முதல் படத்திலேயே எவ்வளவு வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள் மெல்லிசை மன்னர்கள்! Dainty, delightful arrangements.
இந்த பாடலுக்கு MLVயை எப்படி தேர்ந்தெடுத்தார்கள்! அவரும் எப்படி நளினமாக இசைக்கிறார்.... classy, elegant and so stylish!
MLVயுடன் பாடுவது.... G.K.வெங்கடேஷ்!
https://www.youtube.com/watch?v=3o-ZJpoEzAc
#songpostsfromme
- Saravanan Natarajan
No comments:
Post a Comment